நிலக்கரி
நிலக்கரி : சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய உருவ அளவு கொண்ட தாவரங்களான பெரணி களும் ராசிகளும் பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மண்ணுக்கடியில் புதையுண்டன. இவை மெதுவாக சிதைந்து அடர்த்தியான மற்றும் பஞ்சு போன்ற பீட் எனப்படும் பொருளாக மாறின. காலப்போக்கில் அதிக வெப்பத்தினாலும், அசுத்தத்தினாலும் பீட் அழுத்தப்பட்டு நிலக்கரியாக மாறியது. நிலக்கரியை வெட்டி எடுத்தல் : பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள நிலக்கரிப் படு கையிலிருந்து நிலக்கரி வெளியே எடுக்கப்படுகிறது. அ. மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் : பூமியின் மேற்பரப்பில் 22 அடி ஆழத்திற்குள் நிலக்கரிப் படுகைகள் இருக்குமானால் மேற்பகுதி மண் வெளியேற்றப்பட்டு நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. இது மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும். ஆ. கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் : சில இடங்களில் பூமியின் மிக ஆழமான பகுதிகளில் நிலக்கரிப் படுகைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பூமியின் ஆழத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி பெறப்படுகிறது. இது கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும். * உலகளவில் சுமார் 70 நாடுகளில் நிலக்